Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மெதுார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ஜமாபந்தியில் மனு

மெதுார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ஜமாபந்தியில் மனு

மெதுார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ஜமாபந்தியில் மனு

மெதுார் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி ஜமாபந்தியில் மனு

ADDED : மே 31, 2025 01:55 AM


Google News
பொன்னேரி,:பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த 20ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில், கிராமங்கள் வாரியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.

இதில், பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.பி.சேகர், நேற்று அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

மெதுார் கிராமத்தில் உள்ள பர்வதீஸ்வரர் கோவில் குளத்தின் ஒரு பகுதி, தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

மெதுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும். இங்குள்ள மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகே உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து, பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

பேருந்திற்கு காத்திருக்கும் மாணவர்கள் வெயில், மழையில் சிரமப்படுகின்றனர். எனவே, சேதமான பேருந்து நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us