Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் ஏற்பு

ADDED : செப் 08, 2025 11:31 PM


Google News
திருவள்ளூர், திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 383 மனுக்கள் பெறப்பட்டன.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 39, சமூக பாதுகாப்பு திட்டம் 22, வேலைவாய்ப்பு வேண்டி 28, பசுமைவீடு, அடிப்படை வசதி கேட்டு 19 மற்றும் இதர துறை 275 என, மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us