/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மக்கள் குறைதீர் கூட்டம் 358 மனுக்கள் ஏற்புமக்கள் குறைதீர் கூட்டம் 358 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 358 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 358 மனுக்கள் ஏற்பு
மக்கள் குறைதீர் கூட்டம் 358 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 30, 2024 07:50 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 358 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 103, சமூக பாதுகாப்பு திட்டம் 78, வேலைவாய்ப்பு வேண்டி 40, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 67, இதரதுறை 70 என, 358 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில், 33 பயனாளிகளுக்கு 4.40 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் - வளர்ச்சி, சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.