ADDED : மே 18, 2025 10:13 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த சிருளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 45; பெயின்டர்.
இவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து, பொன்னேரி - பழவேற்காடு சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
உப்பளம் கிராமம் அருகே சாலையை கடக்கும்போது, பழவேற்காடு நோக்கி சென்ற மகேந்திரா டிராக்டர் மோதியது. இதில், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார், ரவியின் உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.