Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூவம் ஆற்றில் குப்பை அகற்றம் இரவில் கண்காணிக்க உத்தரவு

கூவம் ஆற்றில் குப்பை அகற்றம் இரவில் கண்காணிக்க உத்தரவு

கூவம் ஆற்றில் குப்பை அகற்றம் இரவில் கண்காணிக்க உத்தரவு

கூவம் ஆற்றில் குப்பை அகற்றம் இரவில் கண்காணிக்க உத்தரவு

ADDED : ஜூன் 14, 2025 07:58 PM


Google News
திருவள்ளூர்:மணவாளநகர் கூவம் ஆற்றில் குவிந்த குப்பையை, நீர்வளத் துறையினர் பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றி வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியம் கேசாவரத்தில் துவங்கும் கூவம் ஆறு, திருவள்ளூர், மணவாளநகர், பூந்தமல்லி, கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் வழியாக வங்க கடலில் கலக்கிறது. கூவம் ஆற்றில், சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலந்து விடுகிறது.

மேலும், மணவாளநகர், வெங்கத்துார், அரண்வாயல்குப்பம், பூந்தமல்லி வரை, கூவம் ஆற்றில் ஆங்காங்கே குப்பையை கொட்டியும், கழிவுநீரை வெளியேற்றியும் வருகின்றனர்.

வெங்கத்துார் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, மணவாளநகர் அருகில் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த குப்பை அனைத்தும், ரயில் நிலையத்திற்கு செல்லும் தரைப்பாலம் அருகில் குவிந்துள்ளது. இதனால், ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரும் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது.

இதையடுத்து, நீர்வளத் துறையினர் கூவம் ஆற்று தரைப்பாலத்தில் தேங்கியுள்ள குப்பையை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றி வருகின்றனர். இப்பணியை கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டார்.

அதன்பின் கலெக்டர், ''ஹோட்டல், கடைகளில் இருந்து கொட்டும் கழிவுகளை மட்கும் மற்றும் மட்காத குப்பையாக பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

''நகராட்சி அலுவலர்கள் இரவு நேரங்களில், இந்த இடங்களை ஆய்வு செய்து, கூவம் ஆற்றில் குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us