Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ படம் மட்டும் கிழிந்து தொங்கும் பேனர்கள்

படம் மட்டும் கிழிந்து தொங்கும் பேனர்கள்

படம் மட்டும் கிழிந்து தொங்கும் பேனர்கள்

படம் மட்டும் கிழிந்து தொங்கும் பேனர்கள்

ADDED : மே 28, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்,

சென்னை, பள்ளிக்கரணையில் 2019 செப்., மாதம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், பைக்கில் சென்ற சுபஸ்ரீ, 23, என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விளம்பர பேனர் வைக்க தடை விதித்தது.

ஆனால், தற்போது நெடுஞ்சாலையோரங்களில் உயரமான கட்டங்கள் மீது விளம்பர பேனர் வைப்பது அதிகரித்துள்ளது.

இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாமலும் உள்ளனர்.

உயரமான கட்டடங்கள் ளில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் இயற்கை சீற்றங்களால் கிழிந்து தொங்கி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும் இவ்வாறு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்களை அகற்றுவதில் சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள், மின்கம்பிகள் மீது விழுந்து மின்சாரம் துண்டிப்பு ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us