ADDED : பிப் 24, 2024 07:59 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த தாங்கல் கூட்டுச்சாலையில் தனியார் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை நின்று கொண்டிருந்த முதியவர் மீது, ஆட்டோ மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர், அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இறந்தார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், இறந்தவர் தாங்கல் காலனியை சேர்ந்த ஆறுமுகம், 60, என தெரிந்தது.