Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாட்டுத்தொழுவமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

மாட்டுத்தொழுவமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

மாட்டுத்தொழுவமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

மாட்டுத்தொழுவமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

ADDED : மார் 28, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
கொண்டஞ்சேரி:தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி.

இவ்வழியே அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கார், பைக் என தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை நெடுஞ்சாலையோரம் கட்டி போட்டு மாட்டுத்தொழுவமாக மாற்றியுள்ளனர். இதனால் நெடுஞ்சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகள் சாலையின் பாதி பகுதியில் படுத்து இளைப்பாறுகின்றன.

இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மாட்டுத்தொழுவத்தை அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us