Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூடப்பாக்கம் சாலையில் மழைநீர் '8' போடும் வாகன ஓட்டிகள்

கூடப்பாக்கம் சாலையில் மழைநீர் '8' போடும் வாகன ஓட்டிகள்

கூடப்பாக்கம் சாலையில் மழைநீர் '8' போடும் வாகன ஓட்டிகள்

கூடப்பாக்கம் சாலையில் மழைநீர் '8' போடும் வாகன ஓட்டிகள்

ADDED : ஜூன் 06, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
கூடப்பாக்கம்:பூந்தமல்லி ஒன்றியம் வெள்ளவேடு அருகே கூடப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. திருமழிசை - - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து, இந்த ஊராட்சிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களக்கு முன் பெய்த மழையால், சேதமடைந்த சாலை பள்ளங்களில், மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, ஒன்றிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கூடப்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us