Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்

குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்

குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்

குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்

ADDED : ஜூன் 09, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக குரங்குகள் வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

மேலும் தெருக்களில், ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட குரங்குகள் செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

சில நேரங்களில் குரங்குகள் வீடுகளில் புகுந்து திண்பண்டங்கள் மற்றும் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் பிஸ்கட் போன்ற பொருட்களை பறித்து செல்கின்றன.

திருத்தணி நகரத்தில் முருகன் கோவில், புண்ணாக்கு மலை மற்றும் பச்சரிசி மலைகள் உள்ளதால் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. வனத்துறையினர் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என, திருத்தணி நகர மக்கள் எதிர்பார்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us