ADDED : பிப் 23, 2024 07:21 PM
அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 43. பால் வியாபாரம் செய்து வந்தார்.
மனைவி சசிகலா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், சிவகுமார் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.