Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மதுக்கடை ஷட்டரை வெட்டி திருட முயன்ற நபர் கைது

மதுக்கடை ஷட்டரை வெட்டி திருட முயன்ற நபர் கைது

மதுக்கடை ஷட்டரை வெட்டி திருட முயன்ற நபர் கைது

மதுக்கடை ஷட்டரை வெட்டி திருட முயன்ற நபர் கைது

ADDED : செப் 30, 2025 12:46 AM


Google News
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே கட்டிங் இயந்திரத்தால் மதுக்கடை ஷட்டரை வெட்டி எடுத்து திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே, ஒதுக்குபுறமான இடத்தில், அரசு மதுக்கடை இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம நபர் ஒருவர் கட்டிங் இயந்திரம் கொண்டு, மதுக்கடையின் ஷட்டரை வெட்டிக்கொண்டிருந்தார்.

அதை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலமாக, கடையின் மேற்பார்வையாளர் சிவகுமார், 45, பொன்னேரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மொபைல்போனில் பார்த்தார்.

உடனடியாக கவரைப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். கடைக்கு சென்ற போலீசாரை கண்டதும், அங்குள்ள புதரில் மர்ம நபர் பதுங்கினார். போலீசார் கைது செய்தனர். திருட முயன்று பிடிப்பட்ட நபர், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த வினோத், 30, என்பதும், அவர் வெல்டர் என்பதும் தெரியவந்தது.

கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us