சவுக்கு தோப்பில் ஆண் சடலம் மீட்பு
சவுக்கு தோப்பில் ஆண் சடலம் மீட்பு
சவுக்கு தோப்பில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 01, 2025 09:27 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொளவேடு கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பில், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.