/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மகளுக்கு பாலியல் தொல்லை பாசக்கார தந்தைக்கு 'ஆயுள்' மகளுக்கு பாலியல் தொல்லை பாசக்கார தந்தைக்கு 'ஆயுள்'
மகளுக்கு பாலியல் தொல்லை பாசக்கார தந்தைக்கு 'ஆயுள்'
மகளுக்கு பாலியல் தொல்லை பாசக்கார தந்தைக்கு 'ஆயுள்'
மகளுக்கு பாலியல் தொல்லை பாசக்கார தந்தைக்கு 'ஆயுள்'
ADDED : மார் 25, 2025 06:35 PM
திருவள்ளூர்:திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு, மனைவி, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர், தன் 11 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கடந்த 2019ல், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவரது மனைவி புகார் அளித்தார்.
புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், அவரை போக்சோ வழக்கில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளுர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தற்போது, திருவள்ளூரில் துவங்கப்பட்ட போக்சோ சிறப்பு நீதின்றத்தில், நீதிபதி சரஸ்வதி முன் நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் நிர்மலா ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சரஸ்வதி, மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.