Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 21ல் கும்பாபிஷேகம்

ADDED : பிப் 11, 2024 12:44 AM


Google News
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும், 21ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் யாகசாலைகள், கோவில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டுதல், அலங்கார மின்விளக்குகள் அமைப்பது, கோவில் வளாகம் முழுதும் சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பணிகளை கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us