/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... டூ கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... டூ கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்
பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... டூ கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்
பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... டூ கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்
பயணியரின்றி கோயம்பேடு பஸ் நிலையம்... டூ கிளாம்பாக்கம், மாதவரத்தில் தொடரும் குழப்பம்

அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இங்கிருந்து திருச்சிக்கு 110 பேருந்துகள், சேலம் -66, விருத்தாசலம் -30 கள்ளக்குறிச்சி- 50 விழுப்புரம் -59, கும்பகோணம் -52, சிதம்பரம் - 21, நெய்வேலி - 46, புதுச்சேரி வழியாக கடலுாருக்கு - 32, திண்டிவனம் வழியாக புதுச்சேரி - 35, செஞ்சி வழியாக திருவண்ணாமலை - 135, போளூர் - 30, வந்தவாசி - 46 என, 710 நடைகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இனி வடசென்னை மக்கள் மாதவரத்தையும், தென்சென்னை மக்கள் கிளாம்பாக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தப்புக் கணக்கு
'மாதவரத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், கொளத்துார் ரெட்டேரி சந்திப்பு, பாடி மேம்பாலம், அம்பத்துார் தொழிற்பேட்டை வழியாக, மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் பயணிக்கும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
80 சதவீதம் தென் மாவட்ட அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து, விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள், நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலுார், நெய்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு, கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து, 710 பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன. படிப் படியாக பேருந்துகள் மாற்றப்பட்டாலும், புதிதாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் கடும் குழப்பத்தில் சிக்கினர். கிளாம்பாக்கம் சென்று, அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வதில் கடும் சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் குமுறினர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சரிந்த வியாபாரம்
எட்டு ஆண்டுகளாக இங்கு கடை வைத்துள்ளேன். மாதம் 50,000 ரூபாய் வாடகை செலுத்துகிறேன். தினமும் 30,000 ரூபாய் வியாபாரம் நடந்த நிலையில், தற்போது 5,000 ரூபாய்க்கு கூட நடப்பதில்லை. இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கடை வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நெல்லை, தஞ்சைக்கு பஸ் வசதி தேவை
-மாதவரத்தில் இருந்து, தென் மாவட்டத்திற்கான பேருந்து வசதி வரவேற்புக்குரியது தான். ஆனால், வடசென்னையின் சுற்றுவட்டாரங்களில் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் வியாபாரிகள் வசிக்கின்றனர். அவர்கள், இங்கிருந்து குடும்பத்துடன் கிளாம்பாக்கம் சென்று பேருந்து பிடிப்பதில், நிறைய சிரமம் உள்ளது. அதற்காக, சில பேருந்துகளை மாதவரத்தில் இருந்து இயக்க அரசு முன்வர வேண்டும்.
விழிபிதுங்கும் நெரிசல்
மாதவரத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து வசதி கிடைத்தாலும், மாதவரம் ரவுண்டானா மேம்பாலத்தை கடந்து செல்வது சவாலாக உள்ளது. மேம்பாலத்தையொட்டி, 200 அடி சாலையில், மெட்ரோ ரயில் திட்ட பணி, உயர் மின் அழுத்த கேபிள் பதிக்கும் பணி, குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளால், போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. மேலும், வடசென்னை மற்றும் எண்ணுார், மீஞ்சூர் துறைமுகங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களும், மாதவரத்தை கடந்து செல்கின்றன. இதனாலும் நெரிசல் அதிகரித்துள்ளது.