Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இணையதள சேவை பாதிப்பு ரேஷன் கடை முற்றுகை

இணையதள சேவை பாதிப்பு ரேஷன் கடை முற்றுகை

இணையதள சேவை பாதிப்பு ரேஷன் கடை முற்றுகை

இணையதள சேவை பாதிப்பு ரேஷன் கடை முற்றுகை

ADDED : மே 18, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
வேப்பம்பட்டு:தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதை வாங்குவதற்காக செல்லும் நுகர்வோரின் ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயர்களில் யாராவது ஒருவர் அங்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும்போது, அவர்களது கைவிரல் ரேகையை கடையில் உள்ள 'பி.ஓ.எஸ்.,' கருவியில் பதிவு செய்து, பொருட்களை ஊழியர்கள் வழங்குவர்.

அவ்வப்போது, இணையதள சேவை பாதிப்படைவதால், 'எஸ்.ஓ.எஸ்.,' கருவி வேலை செய்யாது. அப்போது, ரேஷன் பொருட்கள் விநியோகிப்பட மாட்டாது.

திருவள்ளூர் அடுத்த 86 வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ரேஷன் கடையில், 1,942 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இணையதள இணைப்பு சீராக கிடைக்காததால், இம்மாதம் 401 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பெரும்பாலானோர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அதிருப்தியடைந்த 50க்கும் மேற்பட்டோர், நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us