Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குரூப் - 2 தேர்வு: 3,883 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் - 2 தேர்வு: 3,883 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் - 2 தேர்வு: 3,883 பேர் 'ஆப்சென்ட்'

குரூப் - 2 தேர்வு: 3,883 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : செப் 28, 2025 11:35 PM


Google News
திருவள்ளூர்;திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குரூப் - 2 தேர்வில், 3,883 பேர் தேர்வு எழுதவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ தேர்வு நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வட்டங்களில் 34 மையங்களில் உள்ள 45 தேர்வு கூடங்களில் நடந்தது.

திருவள்ளூர், ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி ஆகிய 5 வட்டங்களிலும், 14,278 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று நடந்த தேர்வில், 10,395 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதம் உள்ள, 3,883 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையத்தை கலெக்டர் பிரதாப் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us