Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பட்டரைபெருமந்துார் நாராயணபுரத்தில் அரசு பள்ளி வகுப்பறை கட்டும் பணி மந்தம்

பட்டரைபெருமந்துார் நாராயணபுரத்தில் அரசு பள்ளி வகுப்பறை கட்டும் பணி மந்தம்

பட்டரைபெருமந்துார் நாராயணபுரத்தில் அரசு பள்ளி வகுப்பறை கட்டும் பணி மந்தம்

பட்டரைபெருமந்துார் நாராயணபுரத்தில் அரசு பள்ளி வகுப்பறை கட்டும் பணி மந்தம்

ADDED : ஜன 27, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
பாண்டூர், பூண்டி ஒன்றியம் பட்டரைபெருமந்துார் ஊராட்சிக்கு உட்பட்டது, நாராயணபுரம் கிராமம். இங்கு அரசு துவக்கப் பள்ளியில், 33 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியின் பழைய கட்டடம் சேதமடைந்ததால், கடந்தாண்டு இடித்து அகற்றப்பட்டது. அதன்பின், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, 2022 -- 2023ம் ஆண்டு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதன்படி இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டும் பணி கடந்தாண்டு மார்ச்சில் துவங்கியது.

இப்பணியை ஜூன் மாதம் முடிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் புதிய வகுப்பறை கட்டடத்தில் அமர்ந்து பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பள்ளி துவங்கி, எட்டு மாதங்கள் ஆகியும் பள்ளி கட்டட பணி, 80 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள் சமுதாய கூடத்தில் அமர வைக்கப்பட்டு கல்வி கற்பிப்பது தொடர்வதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

கட்டட பணியை விரைந்து முடிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us