Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மீடியனில் குப்பை குவியல் பொலிவு இழக்கும் சாலை

மீடியனில் குப்பை குவியல் பொலிவு இழக்கும் சாலை

மீடியனில் குப்பை குவியல் பொலிவு இழக்கும் சாலை

மீடியனில் குப்பை குவியல் பொலிவு இழக்கும் சாலை

ADDED : பிப் 11, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி- கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சியில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மகாலிங்க நகர் அமைந்துள்ளது. அங்கு, 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம், இப்பகுதியில் குப்பையை முறையாக சேகரித்து அப்புறப்படுத்துவதில்லை என கூறப்படுகிறது. அதனால், அந்த பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், தேசிய நெடுஞ்சாலை மீடியனில் குவிக்கப்படுகின்றன.

நாள் கணக்கில் குப்பை அகற்றப்படாமல் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலை பொலிவு இழந்து காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் குப்பை குவிப்பதை தவிர்க்க, மகாலிங்க நகரில் முறையாக குப்பையை சேகரிக்க வேண்டும். அதற்கு எளாவூர் ஊராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us