ADDED : பிப் 23, 2024 07:27 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று, தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்களுக்கான, மருத்துவ முகாம் சங்க தலைவர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில், 150 பேர் பங்கேற்றனர். தொழுநோயால் பாதிக்கப்பட்ட, 63 பேருக்கு, கால் புண் சுய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.