Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குளத்தை ஒட்டி அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

குளத்தை ஒட்டி அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

குளத்தை ஒட்டி அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

குளத்தை ஒட்டி அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

ADDED : ஜூன் 29, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
பூண்டி:பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி அருகே.

அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி மையம் கோவில் குளம் ஒட்டி அமைந்துள்ளது. குளம் மற்றும் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால், குழந்தைகள் விளையாடும் போது குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், சுற்றுச்சுவர் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us