/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆக்கிரமிப்பில் சிக்கிய கழிவு நீர் கால்வாய்ஆக்கிரமிப்பில் சிக்கிய கழிவு நீர் கால்வாய்
ஆக்கிரமிப்பில் சிக்கிய கழிவு நீர் கால்வாய்
ஆக்கிரமிப்பில் சிக்கிய கழிவு நீர் கால்வாய்
ஆக்கிரமிப்பில் சிக்கிய கழிவு நீர் கால்வாய்
ADDED : ஜன 27, 2024 11:33 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சியில், 1000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கழிவுநீர் கால்வாயில் அரசு பள்ளி அருகே துவங்கி சுமார் 100 மீட்டர் துாரத்திற்கு கால்வாய் பகுதியில் கோரைப்புல், செடிகள் முளைத்து காணப்படுகின்றன. இதனால் கால்வாய் மூடு விழா காணும் நிலை உள்ளதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.