Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

ADDED : செப் 17, 2025 09:41 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 19ம் தேதி காலை 10:00 மணியளவில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

இந்த முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம்.

தனியார் துறையில் 'அசெம்ப்ளி லைன் ஆப்பரேட்டர், ஷீட் மெட்டல் வொர்க்கர், மிஷின் ஆப்பரேட்டர், நிர்வாக பணி உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us