/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு
சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு
சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு
சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு
ADDED : செப் 14, 2025 10:01 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த சிங்கராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஏசுகான், 62. இவர், கடந்த 7ம் தேதி தனக்கு சொந்தமான 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் மத்துார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, பொன்பாடி அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் ஏசுகானை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.