Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீன்பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் தவறி விழுந்து பலி

மீன்பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் தவறி விழுந்து பலி

மீன்பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் தவறி விழுந்து பலி

மீன்பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் தவறி விழுந்து பலி

ADDED : மார் 16, 2025 09:38 PM


Google News
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் காலனியைச் சேர்ந்தவர் எட்டியப்பன், 46. இவரது தந்தை கன்னியப்பன், 60, கடந்த 14ம் தேதி திருப்பதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு, இப்பகுதியில் உள்ள சப்பார் ஏரியில் மீன்பிடிக்க சென்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்தவர், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, எட்டியப்பன் அளித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us