Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ADDED : ஜூன் 30, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவசம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சாய்ரட்சை பூஜையும் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை, 6:00 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வீதியில் குவிந்தனர். பொதுவழியில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் தேர்வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மலைக் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் சார்பில், மூன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருத்தணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us