Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நரசிங்கமேடில் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

நரசிங்கமேடில் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

நரசிங்கமேடில் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

நரசிங்கமேடில் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ADDED : ஜூன் 30, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
பொன்னேரி:நரசிங்கமேடு கால்வாய் பாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.

பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் இருந்து நரசிங்கமேடு வழியாக, சிறுவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், நரசிங்கமேடு கிராமத்தில், இலவம்பேடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் சேதம் அடைந்து உள்ளது.

பாலத்தின் ஒரு பகுதியில் கட்டுமானங்கள் சிதைந்து பெரிய ஓட்டையாக மாறி இருக்கிறது. மற்ற பகுதிகளில் கான்கிரீட் கட்டுமானங்கள் சேதமாகி, பாலம் முழுமையாக பலவீனம் அடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் பாலத்தில் உள்ள ஓட்டையில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.

விவசாய நிலங்களுக்கு செல்லும் டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் பலவீனமாக உள்ள பாலத்தை கடக்கும்போது, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

பாலம் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் அபாயம் உள்ளதால், இந்த பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us