Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பூச்சி மருந்து குடித்த தம்பதி: மனைவி பலி

பூச்சி மருந்து குடித்த தம்பதி: மனைவி பலி

பூச்சி மருந்து குடித்த தம்பதி: மனைவி பலி

பூச்சி மருந்து குடித்த தம்பதி: மனைவி பலி

ADDED : ஜன 30, 2024 10:43 PM


Google News
பொன்னேரி:பொன்னேரி, என்.ஜி.ஓ.நகரைச் சேர்ந்தவர் அபிநயா, 22. இவரது கணவர் சிவா, 27: கூலித்தொழிலாளி. கடந்த, 2020ல், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்தனர். அபிநயா, பெற்றோருடன் தங்கி தனியார் கல்லுாரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவா, பொன்னேரி அடுத்த எலவம்பேடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். பின், பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை பகுதிக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி, குளிர்பானத்தில் கலந்து குடித்தனர்.

மாலையில் வீடு திரும்பிய அபிநயா, மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டார்.

அதேபோல் சிவாவும் அவரது வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சையில் கவலைக்கிடமாக உள்ளார். பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us