Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீஞ்சூரில் அறிவுசார் மையம் கட்டுமான பணி துவக்கம்

மீஞ்சூரில் அறிவுசார் மையம் கட்டுமான பணி துவக்கம்

மீஞ்சூரில் அறிவுசார் மையம் கட்டுமான பணி துவக்கம்

மீஞ்சூரில் அறிவுசார் மையம் கட்டுமான பணி துவக்கம்

ADDED : ஜூன் 11, 2025 10:52 PM


Google News
மீஞ்சூர்:அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக, பேரூராட்சி பகுதிகளில், 20 இடங்களில் 33 கோடி ரூபாயில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடர் மானியகோரிக்யைின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட, 15வது வார்டு வள்ளுவர் நகரில், 1.55 கோடி ரூபாயில் அறிவுசார் மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.

பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் ஆகியோர் பங்கேற்று பணிகளை துவங்கி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us