/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ காரில் கடத்தப்பட்ட கஞ்சா போதை மாத்திரை பறிமுதல் காரில் கடத்தப்பட்ட கஞ்சா போதை மாத்திரை பறிமுதல்
காரில் கடத்தப்பட்ட கஞ்சா போதை மாத்திரை பறிமுதல்
காரில் கடத்தப்பட்ட கஞ்சா போதை மாத்திரை பறிமுதல்
காரில் கடத்தப்பட்ட கஞ்சா போதை மாத்திரை பறிமுதல்
ADDED : செப் 19, 2025 10:03 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்டனர்.
காரில், 400 கிராம் கஞ்சா, 100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்திய, வேலுார் அடுத்த காட்பாடியைச் சேர்ந்த அரவிந்த் வர்மன், 26, என்பவரை கைது செய்தனர்.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.