Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மூதாட்டியை கொன்ற பி.எஸ்.எப். வீரர் கைது

மூதாட்டியை கொன்ற பி.எஸ்.எப். வீரர் கைது

மூதாட்டியை கொன்ற பி.எஸ்.எப். வீரர் கைது

மூதாட்டியை கொன்ற பி.எஸ்.எப். வீரர் கைது

ADDED : ஜூன் 18, 2025 08:02 PM


Google News
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த மீசரகாண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள், 67. இவரது மகன் முருகன், அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரான கடிகாசலம், 49, என்பவரிடம் 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

கடிகாசலம் அந்த பணத்தை திரும்ப தரும்படி முருகனிடம் கேட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 2 லட்சம் ரூபாய் திரும்ப கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தையும் கடிகாசலம் திரும்ப தரும்படி, தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முருகனின் தாயிடம் பணத்தை கேட்டு கடிகாசலம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கடிகாசலம் அவரது கையில் வைத்திருந்த கத்தியால், வள்ளியம்மாளை வெட்டினார்.

இதில், சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் இறந்தார். ஆர்.கே.பேட்டை போலீசார், வள்ளியம்மாளின் சடலத்தை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளி கடிகாசலத்தை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us