ADDED : மார் 22, 2025 11:47 PM
பைக் திருட்டு
திருத்தணி, திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 45. இவர், நேற்று முன்தினம் இரவு 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.