Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது

ADDED : ஜூன் 10, 2025 11:41 PM


Google News
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனத்தினருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு, மாநில விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக ஆர்வலர், தொண்டு நிறுவனத்தினர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு வரும் ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் பரிசு மற்றும் பதக்கம் வழங்க உள்ளார்.

திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் படிவத்தை வரும் 30ம் தேிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us