Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பிற்படுத்தப்பட்டோர் தொழில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

பிற்படுத்தப்பட்டோர் தொழில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

பிற்படுத்தப்பட்டோர் தொழில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

பிற்படுத்தப்பட்டோர் தொழில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூலை 02, 2025 09:14 PM


Google News
திருவள்ளூர்:பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் தொழில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுவினர், தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, சிறுதொழில் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழு கடன் திட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படுகிறது.

அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, இரண்டு கறவை மாடு வாங்க 1.20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.tabcedco.tn.gov.in என்ற இணையத்தில், பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

அனைத்து ஆவணங்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us