Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கால்நடை குடிநீர் தொட்டியில் மதுபாட்டில்கள்

கால்நடை குடிநீர் தொட்டியில் மதுபாட்டில்கள்

கால்நடை குடிநீர் தொட்டியில் மதுபாட்டில்கள்

கால்நடை குடிநீர் தொட்டியில் மதுபாட்டில்கள்

ADDED : ஜூன் 15, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சியில், விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள கால்நடைகளின் தேவைக்காக, கிராமத்தின் எல்லையில் கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இந்த தொட்டியின் சுவரில் அமர்ந்து மது அருந்தும் 'குடி'மகன்கள், காலி மதுபாட்டில்களை தொட்டியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதனால், தொட்டியில் தண்ணீர் நிரப்புவது கைவிடப்பட்டுள்ளது. கால்நடைகளின் தேவைக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, ராமச்சந்திராபுரம் பகுதியில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us