ADDED : பிப் 01, 2024 08:10 PM
பொன்னேரி:சென்னை பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
புகாரின் பேரில் எம்.எல்.ஏ., மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பட்டியலின பெண் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காதது கண்டித்து நேற்று அ.தி.மு.க., சார்பில், பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


