Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வரும் 29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : பிப் 23, 2024 07:25 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், வரும், 29, காலை 10:00 மணியளவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண, கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம்;

வருவாய், ஊரக வளர்ச்சி, பேருராட்சி, நகராட்சி மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us