Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பெருகிவரும் பேனர் கலாசாரம்

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பெருகிவரும் பேனர் கலாசாரம்

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பெருகிவரும் பேனர் கலாசாரம்

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பெருகிவரும் பேனர் கலாசாரம்

ADDED : பிப் 11, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
கடம்பத்துார்: நெடுஞ்சாலையில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைப்பது பெருகி வருகின்றன.

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார், மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், போளிவாக்கம், தொடுகாடு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த சாலை வழியே தினமும் அரசு, தனியார் பஸ், பள்ளி, கல்லுாரி தொழிற்சாலை பஸ், இரு சக்கரம், கார், லாரி என தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.

மேலும் இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள மேல்நல்லாத்துார் ஊராட்சி மன்ற அலுவலகமே விளம்பர மையமாகி வருகிறது.

இதற்கு அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள்குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நிகழ்ச்சி முடிந்தும் விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, நெடுஞ்சாலையோரம் மற்றும் கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us