Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

'பெல்ட்' ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

ADDED : ஜூன் 18, 2025 08:05 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளதாக, சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் , திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.'

பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. கலெக்டர் பிரதாப் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 பட்டா வழங்க கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us