Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின் கம்பிகளில் சிக்கி 4 எருமை மாடுகள் பலி

மின் கம்பிகளில் சிக்கி 4 எருமை மாடுகள் பலி

மின் கம்பிகளில் சிக்கி 4 எருமை மாடுகள் பலி

மின் கம்பிகளில் சிக்கி 4 எருமை மாடுகள் பலி

ADDED : செப் 08, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
மீஞ்சூர்:மீஞ்சூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி , மின்சாரம் பாய்ந்து நான்கு எருமை மாடுகள் பலியாகின.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன், 45. மாடுகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர், நேற்று காலை எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள நந்தியம்பாக்கம் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்பகுதியில் மின்கம்பி அறுந்து கிடப்பதை கண்டார். உடனடியாக, மாடுகளை வேறு பகுதிக்கு அழைத்து செல்லும் முன், மின்சாரம் பாய்ந்து நான்கு எருமை மாடுகளும் உயிரிழந்தன.

தகவல் அறிந்த மின்வாரியத்தினர், அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து, மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து, மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடியிருப்பு மக்கள் கூறியதாவது:

நந்தியம்பாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பிகள், 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. மேலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால், விபத்து ஏற்படும் என, மீஞ்சூர் மின்வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, அறுந்து கிடந்த மின்கம்பியில் மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளன. இனிமேலாவது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க, மின்வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us