பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு
பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு
பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு
ADDED : ஜூலை 04, 2025 08:38 PM
திருத்தணி:திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 2.5 சவரன் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி வள்ளியம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 49. இவர், துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 2ம் தேதி திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் முருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த முருகன், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2.5 சவரன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.