Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு

ADDED : ஜூன் 25, 2025 09:19 PM


Google News
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் கொசுஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் உள்ளது. மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக பெறப்படும் கிருஷ்ணா நீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வினாடிக்கு, 433 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி., யில், 2 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம், 35 அடி. தற்போது, 31.38 அடி உள்ளது. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 380 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us