ADDED : ஜூன் 20, 2024 09:14 PM
திருத்தணி:திருத்தணி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி, 21. கல்லுாரி மாணவர். இவரை கடந்த, 9ம் தேதி திருத்தணி பகுதியைச் சேர்ந்த அசாம்முகமத், 23, இளங்கோவன், 24, சதீஷ்குமார், வெங்கடேசன் ஆகியோர் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
திருத்தணி போலீசார் ஏற்கனவே இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.