Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஆர்.கே.பேட்டையில் அமையுமா?

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஆர்.கே.பேட்டையில் அமையுமா?

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஆர்.கே.பேட்டையில் அமையுமா?

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் ஆர்.கே.பேட்டையில் அமையுமா?

ADDED : ஜூன் 02, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அய்யனேரி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. சோளிங்கரில் இருந்து பரவத்துார் செல்லும் சாலையில் அய்யனேரி கிராமம் அமைந்துள்ளது.

இந்த நெல் கொள்முதல் நிலையம், தற்போது அறுவடை பருவம் நிறைவடைந்துள்ளதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்திற்கு உரிய சாலை வசதி மற்றும் நெல் கிடங்கு வசதி கிடையாது. இந்நிலையில், இந்த கிராமத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றன.

மேலும், உரிய கிடங்கு வசதியும் இல்லை. இதற்கு முன், கொண்டாபுரம் சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வந்தது. அங்கும் உரிய வசதி இல்லாததால், அய்யனேரிக்கு இடம் மாற்றப்பட்டது.

அனைத்து பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், எளிதாக வந்து செல்ல வசதியாக, ஒன்றிய தலைமையிடமான ஆர்.கே.பேட்டையில், நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us