ADDED : ஜூன் 19, 2024 01:09 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாரதி நகர் பகுதியில் வசித்தவர் முருகன், 58. கூலி தொழிலாளி.
நேற்று முன்தினம், அரும்பாக்கம் சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடக்க முயன்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற டூ-- வீலர் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.