Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பீரோ உடைத்து நகை பணம் திருடியவர் கைது

பீரோ உடைத்து நகை பணம் திருடியவர் கைது

பீரோ உடைத்து நகை பணம் திருடியவர் கைது

பீரோ உடைத்து நகை பணம் திருடியவர் கைது

ADDED : ஜூன் 15, 2024 12:39 AM


Google News
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி, 30. கடந்த, 4ம் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த, நான்கரை சவரன் நகை, 45,000 ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.

சந்தேகத்தின் பேரில், பாலவாக்கம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த தனுஷ், 20 என்பவரை போலீசார் விசாரித்தினர். இதில் பணம், நகையை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பணம், நகை மீட்கப்பட்டது. தனுைஷ ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us