Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெண்ணை தாக்கியவர் கைது மூவருக்கு வலை

பெண்ணை தாக்கியவர் கைது மூவருக்கு வலை

பெண்ணை தாக்கியவர் கைது மூவருக்கு வலை

பெண்ணை தாக்கியவர் கைது மூவருக்கு வலை

ADDED : ஜூலை 24, 2024 08:10 PM


Google News
திருத்தணி:திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி விசாலாட்சி, 39. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று, தெருவில் நடந்து சென்ற விசாலாட்சியை வழிமறித்த ராமச்சந்திரன், அவரது மனைவி லட்சுமி, மகன் பிரசாத் மற்றும் உறவினர் தனுஷ் ஆகியோர், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில், காயமடைந்த விசலாட்சி திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பிரசாத், 25, என்பவரை கைது செய்தனர். மற்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us