Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 2 ஆண்டாக பூட்டியே கிடக்கும் நுாலகம்

2 ஆண்டாக பூட்டியே கிடக்கும் நுாலகம்

2 ஆண்டாக பூட்டியே கிடக்கும் நுாலகம்

2 ஆண்டாக பூட்டியே கிடக்கும் நுாலகம்

ADDED : ஆக 01, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிளை நுாலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த நுாலகம் போதிய பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்த இந்த கிளை நுாலகம் கடந்த 2022ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிளை நுாலகம் ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்கபட்ட்டது.

இந்த நுாலகம் சீரமைக்கப்பட்டு, இரு ஆண்டுகளாகியும் நுாலகர் மற்றும் புத்தகங்கள் இல்லாமல் பூட்டியே கிடந்து வீணாகி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளை நுாலகத்தை புத்தகங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வயலுார் நுாலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us