Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

ADDED : ஆக 05, 2024 06:28 PM


Google News
திருவள்ளூர்:பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, வரும், 20, 28 ல் பேச்சு போட்டி நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஈ.வே.ராமசாமி ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, வரும் 20 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடக்கிறது. முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, முறையே 5000, 3000 மற்றும் 2000 ரூபாய் வழங்கப்படும்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர் இருவருக்கு, சிறப்பு பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து, adtdtrl@gmail.com என்ற இமெயிலில் வரும் 16க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, காலை 9:30 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகல் 2:30 மணிக்கும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us